×

குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு

மாமல்லபுரம், ஏப். 10: மாமல்லபுரம் அருகே குற்ற சம்பவங்களை தடுக்க தற்காலிக கூடாரம் அமைத்து, அதில், சிசிடிவி கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் இசிஆர் சாலை முக்கிய சாலையாகும். இச்சாலை, வழியாக தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், வாகன போக்குவரத்து மிகுந்து பரபரப்புடன் காணப்படும். இந்நிலையில், இசிஆர் சாலையின் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்கும் வகையில், குற்றவாளிகளை அடையாளம் காணவும், வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் நுழைவு வாயில் எதிரே தற்காலிக கூடாரம், சிசிடிவி கேமராக்கள் அமைத்து மாமல்லபுரம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதனை, சுழற்சி முறையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, இசிஆர் சாலை வழியாக தப்பிச் செல்ல முயலும் மர்ம நபர்களை எளிதில் பிடிக்க முடியும், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post குற்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி பொருத்தி போலீசார் கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,ECR ,Chennai ,Puducherry ,Dinakaran ,
× RELATED கடற்கரை, மயானத்திற்கு செல்ல முடியாமல்...